ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றி பெற்றது.
இதனை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் மூவர்ண கொடி பேரணி நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் பகுதியில் பாஜகவினர் கொடி பேரணியை நடத்தினர். செட்டிகுளம் சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு வரை நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.