கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!
Sep 6, 2025, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

Web Desk by Web Desk
May 31, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவேற்காடு நகராட்சி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோலடி கிராமத்தில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் முயற்சி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. விளையாட்டுத்திடலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்தும் மக்களின் எதிர்ப்பு குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருவேற்காடு நகராட்சியில் எந்த ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றாலும் அவர்கள் நாடக்கூடிய ஒரே மைதானம் இந்த கோலடி மைதானம் தான். எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அத்தகைய விளையாட்டு மைதானத்தைக் கையகப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை, கடும் எதிர்ப்பை மீறியும் அங்குக் கழிவுநீர் சுத்திகரித்து நிலையத்தை அமைக்க முயற்சிப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்த மைதானத்திற்குள் தற்போது யாரும் நுழைய முடியாத அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  இதே விளையாட்டு மைதானத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயன்ற போது எதிர்க்கட்சியாக இருந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பின்பு அதனை அமைத்தே தீருவோம் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்கள் அதிகளவு வசிக்கும்  இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டுவராத திமுக அரசு, அதற்கு மாறாக அவர்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு இதுபோன்ற உடல்நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை ஊருக்கு நடுவில் கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மைதானத்திற்கு ஒருபுறம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளியும், மறுபுறம் திருவேற்காடு நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீருக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால், காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்வதாகவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரின் நடுப்பகுதியில் திமுக அரசு கொண்டுவர முயற்சிப்பதின் பின்னணி அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: திருவேற்காடு நகராட்சிதமிழக அரசுAngry people: The playground is a sewage treatment plantவிளையாட்டு மைதானம்கொந்தளிக்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

Next Post

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் – சிஐஐ, கேபிம்ஜி

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies