சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்குச் சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் சாங் சியோகாங் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதே சமயம், பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட, சீனாவின் அதிநவீன ராக்கெட்டாக கருதப்படும் PL-15E என்ற வெடிக்காத ஏவுகணையை இந்திய ராணுவம் கைப்பற்றியதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும் என்றும், அது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதுகாப்பு கண்காட்சிகளில் பலமுறை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.