தவறாகப் பேசி இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் கேட்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் கூறியதற்கு, கர்நாடக முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், தவறாகப் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் கேட்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.