கேரளாவில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கன்னூர், காசர்கோடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும், கோட்டயம், பத்தனம்த்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
கனமழை எதிரொலியால் 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், திருவிதாங்கூர் மாவட்டத்தின் கடாசிக்கடவு பகுதியில் மரம் விழுந்து ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.