முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோவின் புதிய வழித்தடத்தையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முப்படைகளின் அதிரடி தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியதாக தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ததாகக் கூறிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார்.