திருச்சி மாவட்டம், வயலூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சுப்புராஜ் நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
மாநகராட்சி ஒப்பந்த பணியாளரான இவர் மதுபோதையில் காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது முருகானந்தத்தின் கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.