ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.
தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெறும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 24 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.