கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கோட்டாம்பட்டி – பணிக்கம்பட்டி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.