நெல்லை மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாஞ்சோலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அதிக பட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கும் எனவும், இடியுடன் கூடிய கன மழைக்கு 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மாஞ்சோலையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஆபத்தான இடங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.