சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
லாச்சென் பகுதியில் இருந்து லாசங் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டீஸ்டா ஆற்றில் கவிழ்ந்தது.
இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும், மாயமான 8 பேரின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வாகனம் கவிழ்ந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.