ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலயத்தைச் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஆளுநருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.