இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததென ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தை ஜே.இ.இ தேர்வர்கள் சுற்றி பார்க்கும் “டெமோ டே” நிகழ்வு அங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜே.இ.இ தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் கணினி அறிவியல் பாட பிரிவை மட்டும் தேர்வு செய்யாமல், பிற பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்திய ராணுவம் சமீபத்தில் நடத்திய ஆப்ரேஷன் சிந்துர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் காமகோடி தெரிவித்தார்.