கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சுட்டிக்காட்டிய யூடியுபர் ஒருவர் குழந்தைகளுக்கான உருட்டு வண்டியைச் சாலையில் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
குழித்துறை பாலத்தில் சாலை செப்பனிடும் பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இதனைச் சுட்டிக்காட்டும் விதமாக மெர்சென் என்ற யூடியுபர் குழந்தைகளுக்கான உருட்டை வண்டியைச் சாலையில் ஓட்டி சென்றார்.