இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், வதோதராவின் பருல் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் தேசிய நலன்களுக்கான எந்த முடிவுகளும் தயக்கமின்றி தொடர்ந்து எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி வழங்கப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் கூறினார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.