திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நாய் கண்காட்சி தொடங்கியது.
கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த வாரம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கோடை விழாவின் 7-ம் நாளையொட்டி பிரையண்ட் பூங்காவில் நாய் கண்காட்சி தொடங்கியது. இதில் ஜெர்மன் ஷெப்பர்ட், இந்தியன்ஸ் பிக்ஸ், கோல்டன் ரெட்ரீவர் உட்பட பல்வேறு உயர்ரக நாய்கள் இடம்பெற்றன.