மக்களுக்கு விரோதமான திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் திமுகவைத் தோற்கடிக்க அனைத்து கட்சியும் ஓரணியில் சேர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
தாமிரபரணியைச் சுத்தப்படுத்த இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியவர், ஐ.நா முதல் அயோத்தி வரை திருவள்ளுவரின் புகழைப் பரப்பியவர் பிரதமர் மோடி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
பிற மொழியைக் குறை கூறுவதை யாராலும் ஏற்க முடியாது என்றும் அரக்கோணம் மாணவி விவகாரம் போலப் பாவச்செயல் செய்வோரை திமுக ஊக்குவிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.