அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழை தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குதல் மற்றும் மீட்புப் பணிகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.