துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை கேரள சமூகத்தினர் வரவேற்ற சம்பவம் இந்தியாவிற்கு எதிரான செயல் என்று கூறி நெட்டிசன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
துபாயில் உள்ள ஒரு கேரள சமூகத்தினர், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியை வரவேற்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.