வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தி உள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில்,அது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.