நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 395-ஐ எட்டியுள்ளது.
ஒரே நாளில் 685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டெல்லி, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.