சிரியாவின் கடலோர மாகாணங்களான டார்டூஸ் மற்றும் லடாகியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் ஆயுதங்கள் சேகரிப்புக் கூடங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.