பிரேசில் நாட்டில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரீபாா்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அந்த பொம்மை தொடர்பான காட்சிகள் வைரலாகப் பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பொம்மையைக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் பார்த்து, வாங்கி செல்கின்றனர். சிலர் இதனை தங்கள் குழந்தையைப் போலவே பாவித்துப் பார்த்துக் கொள்கின்றனர்.