நைஜீரியாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜர் மாகாணத்தில் உள்ள மோக்வா நகரில் பெய்த கனமழையால், பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் மூழ்கின. வெள்ளநீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை, வெள்ளம் காரணமாக உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.