இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜூன் 22ம் தேதி இந்து இயக்கங்கள் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்காப தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும்,
ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நெல்லையப்பர் கோவிலில் இருந்த யானை இறந்து 5 மாதங்கள் ஆவதாகவும், நெல்லையப்பர் கோயிலுக்கு யானை கொண்டு வர தடை இருந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.