டெல்லி ஜங்புரா பகுதியில் 500 தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் இடித்து அகற்றப்பட்டது.
டெல்லி ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி முகாமில் சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து 500 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்த மதராசி முகாம் இடித்து அகற்றப்பட்டது.
முகாமில் வசித்து வந்த 200க்கும் குறைவான குடும்பத்தினருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
70 ஆண்டுகளாக வசித்து வந்த தங்களை வெளியேற்றுவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், குடியிருப்புவாசிகள் பலருக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.