கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி வரையும்,6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி வரையும், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இன்றைய தினமே மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதால், ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையை கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.