நெல்லையப்பர் கோயிலுக்கு தேர் செய்ய 200 கிலோ வெள்ளி கட்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததால் ஊழியர்கள் 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நெல்லையப்பர் கோயிலில் புதியதாக வெள்ளி தேர் செய்யும் பணிக்காக உபயதாரர்கள் மூலம் பெறப்பட்ட 200 கிலோ வெள்ளி கட்டிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோரிடம் வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக அறநிலைத்துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிற்பகலில் அரங்கிற்கு வந்துவிட்டனர்.
மாலை 4 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் அமைச்சர் மற்றும் சபாநாயகர் வராததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், அறநிலையத்துறை ஊழியர்கள் ஒரே இடத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.