கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூரில் ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் தங்கியிருப்பதுடன் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.