இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வர, அமைதிக்கான நோபல் பரிசே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதே, எப்படியாவது நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.
அதனால் இந்த முறை உலகின் பல நாடுகளிலும் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறி, நோபல் பரிசு வாங்க ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.