இந்தியாவில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் வழங்கும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.