மும்பை அணியுடனான வெற்றியின் மூலம் அந்த அணியுடன் 200+ இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையைப் பஞ்சாப் அணி பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு தற்போது பஞ்சாப் அணி முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.