ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர்ஸ் 2 போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024-ம் ஆண்டு கொல்கத்தா அணியையும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.