கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தின் தாவரகேரா பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், சென்னப்பா நரினல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், சிந்தனூர் சர்கில் பகுதியில் நடந்து சென்ற சென்னப்பாவை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் படுகொலை செய்தது.
இது குறித்து சென்னப்பாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், இரு தினங்களுக்கு முன்பு சென்னப்பாவின் புகைப்படத்தை நாகராஜ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாகவும், இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் அலட்சியத்தால் சென்னப்பா உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.