கள்ளக்குறிச்சியில் செயல்படும் அரசுப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர், காலணி அணிந்தபடி தேசியக் கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் படிக்க வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், காலணி அணிந்தபடி பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றியதால், ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.