தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அதளபாதாளத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு மதுபோதையே காரணமெனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொலை சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசும், காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டதைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
பெரும்பாலான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களே காரணமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.