ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார். இது குறித்து
கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இருமுறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு கூட்டத்தை கூட்டுவது முடியாத காரியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலையில் துவங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.