ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே கார் விற்பனை நிலையத்தில் புகுந்து கொள்ளையர்கள் பணத்தைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் மாருதி கார் விற்பனை நிலையத்தில் நள்ளிரவு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், விற்பனை அதிகாரியை கட்டிப்போட்டு 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்த லாக்கரை தூக்கிச் சென்றனர்.
விற்பனை அதிகாரி அளித்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.