மத்தியப்பிரதேசத்தில் வேன் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தின் மேக்நகர் பகுதியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. சஞ்சேலி பகுதியில் ரயில்வே பால கட்டுமான பணி நடைபெற்று வருவதால், அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் சிமெண்ட் லாரி சென்றபோது பாராம் தாங்காமல் சமநிலையை இழந்து பக்கத்தில் சென்ற வேன் மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.