இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை - மருத்துவர்கள்!
Jun 6, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2019ம் ஆண்டு உலகையே புரட்டி போட்ட கோவிட் -19 வைரஸ், அதன் பிறகு புதுப்புது வடிவங்களில் இன்னமும் மக்களைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், உலக அளவில் SARS-CoV-2 வகை தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும், தென்கிழக்கு ஆசியா ,மத்திய தரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இந்த புதிய வகை நோய்த் தொற்று பரவல் அதிகமாகக் காணப் படுவதாகவும் கூறியிருந்தது.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்  என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. இதுவரை கேரளாவில் தான் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,435 ஆகும். அடுத்தப் படியாக ,மகாராஷ்டிராவில் 506 பேரும், குஜராத்தில் 338 பேரும்,டெல்லியில் 483 பேரும், கர்னாடகாவில் 253 பேரும்,தமிழகத்தில் 189 பேரும் கொரொனா தொற்றுக்குச்  சிகிச்சை எடுத்து  வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதிகப் பட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதற்கடுத்த படியாகக் கர்நாடகத்தில்  58 பேரும், மேற்குவங்கத்தில் 41 பேரும், தமிழகத்தில் 26 பேரும், கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நாட்டில் 4026 பேர் கொரொனா  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், கொரோனாவின்  NB.1.8.1, JN.1 LF.7, XFG ஆகிய ஒமிக்ரான் வகை வைரஸ்களே இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது பரவும் கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள்  கொரொனா வைரஸுக்கு எதிரான நோய் சக்தியுடன் உள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே, தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைந்துவிட்டாலும், குறிப்பிட்ட  வைரஸை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதைத் தடுப்பூசி போடப்பட்ட உடல் மறக்காது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், முக கவசம் அணிவது போன்ற அடிப்படை பாதுகாப்பு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளனர்.

சளி,  இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிந்து கொள்ளச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்று   மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

Tags: Corona again in India: No need for a new booster vaccine - Doctorsபுதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லைஇந்தியாவில் மீண்டும் கொரொனா
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Next Post

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Related News

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமை – ரிசர்வ் வங்கி அனுமதி!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்!

ட்ரம்ப், ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு – வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை!

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக, திமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்!

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies