இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை - மருத்துவர்கள்!
Sep 18, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2019ம் ஆண்டு உலகையே புரட்டி போட்ட கோவிட் -19 வைரஸ், அதன் பிறகு புதுப்புது வடிவங்களில் இன்னமும் மக்களைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், உலக அளவில் SARS-CoV-2 வகை தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும், தென்கிழக்கு ஆசியா ,மத்திய தரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இந்த புதிய வகை நோய்த் தொற்று பரவல் அதிகமாகக் காணப் படுவதாகவும் கூறியிருந்தது.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்  என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. இதுவரை கேரளாவில் தான் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,435 ஆகும். அடுத்தப் படியாக ,மகாராஷ்டிராவில் 506 பேரும், குஜராத்தில் 338 பேரும்,டெல்லியில் 483 பேரும், கர்னாடகாவில் 253 பேரும்,தமிழகத்தில் 189 பேரும் கொரொனா தொற்றுக்குச்  சிகிச்சை எடுத்து  வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதிகப் பட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதற்கடுத்த படியாகக் கர்நாடகத்தில்  58 பேரும், மேற்குவங்கத்தில் 41 பேரும், தமிழகத்தில் 26 பேரும், கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நாட்டில் 4026 பேர் கொரொனா  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், கொரோனாவின்  NB.1.8.1, JN.1 LF.7, XFG ஆகிய ஒமிக்ரான் வகை வைரஸ்களே இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது பரவும் கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள்  கொரொனா வைரஸுக்கு எதிரான நோய் சக்தியுடன் உள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே, தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைந்துவிட்டாலும், குறிப்பிட்ட  வைரஸை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதைத் தடுப்பூசி போடப்பட்ட உடல் மறக்காது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், முக கவசம் அணிவது போன்ற அடிப்படை பாதுகாப்பு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளனர்.

சளி,  இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிந்து கொள்ளச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்று   மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

Tags: Corona again in India: No need for a new booster vaccine - Doctorsபுதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லைஇந்தியாவில் மீண்டும் கொரொனா
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Next Post

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Related News

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies