லடாக் யூனியன் பிரதேசத்திற்கான புதிய இட ஒதுக்கீடு மற்றும் குடியுரிமை விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
லடாக்கில் மொழி, கலாச்சாரம், நிலம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். இந்நிலையில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் லடாக்கில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லடாக்கில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் லடாக் குடியுரிமை பெறத் தகுதி உடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.