தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்குப் பட்டாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவானது ராவண வதத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சியின் 2-ம் நாளையொட்டி கோதண்டராமர் கோயிலில் ராமருக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராவணனின் சகோதரர் விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.