தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Sep 5, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 08:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு வர வேண்டியா முதலீடுகளை  திமுக அரசு கோட்டை விடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், , தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  தமிழகத்திற்கு வர வேண்டிய ஃபாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் ₹3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு, ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

ஆனால் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக, தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய ஸ்டாலின் அவர்களோ. “முதலீடுகளை ஈர்க்கிறேன்” என்ற பெயரில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

“புலி வருது, புலி வருது” என்ற கதையாக திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே, அது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிடச் சொன்னாலோ அல்லது ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி (எண் 185) என்னவாயிற்று எனக் கேள்வி கேட்டாலோ முதல்வரிடம் பதிலில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அபார ஆற்றலும், அசாத்திய திறமைகளையும் கொண்ட நமது தமிழக இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் அமைத்துத் தராமல் தங்கள் மோசடிகளை மூடி மறைப்பதிலேயே முழுக் கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வரும் அவரது அமைச்சர்களும் அரசுப் பதவி வகிக்க துளியும் தகுதியற்றவர்கள் என அவர் கூறியுள்ளார்.

நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-இல் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: multinational companiesTamil NaduTamil Nadu Chief MinisterTamil Nadu BJP state president Nainar NagendranDMK government of blocking investments
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

Related News

வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி – பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

Load More

அண்மைச் செய்திகள்

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies