குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த மற்றொரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதிகாலை நிகழ்ந்த விபத்தில் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்து காரணமாக அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.