ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய விலைக்கடைகளை நாடும் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் புதிய நடைமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் 38 ஆயிரத்து 411 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி அமலாகியிருக்கும் புதிய நடைமுறையால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பில் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தோடு, பொருட்களை எடையிடும் இயந்திரமும் வைபையில் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் பொருட்களைப் பெற 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நியாயவிலைக்கடையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் எனக்கூறி ஏற்கனவே எளிதாக இருந்த நடைமுறையை மாற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் வைபையில் தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி அமலுக்கு வந்திருக்கும் இந்த புதிய முறை குறித்து உரியப் பயிற்சி வழங்காத காரணத்தினால் அதனைக் கையாளுவதில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் அப்பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமைந்திருக்கிறது. பழைய நடைமுறையோ, புதிய நடைமுறையோ எதுவாக இருந்தாலும் தங்களுக்கான பொருட்களை நேரவிரயமின்றி பெறுவதற்கு ஏதுவாக எளிமையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Ration ShopTn newsNew procedure at ration shops: People are struggling to get essential items
ShareTweetSendShare
Previous Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Next Post

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies