ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!
Oct 26, 2025, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய விலைக்கடைகளை நாடும் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் புதிய நடைமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் 38 ஆயிரத்து 411 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி அமலாகியிருக்கும் புதிய நடைமுறையால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பில் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தோடு, பொருட்களை எடையிடும் இயந்திரமும் வைபையில் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் பொருட்களைப் பெற 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நியாயவிலைக்கடையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் எனக்கூறி ஏற்கனவே எளிதாக இருந்த நடைமுறையை மாற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் வைபையில் தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி அமலுக்கு வந்திருக்கும் இந்த புதிய முறை குறித்து உரியப் பயிற்சி வழங்காத காரணத்தினால் அதனைக் கையாளுவதில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் அப்பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமைந்திருக்கிறது. பழைய நடைமுறையோ, புதிய நடைமுறையோ எதுவாக இருந்தாலும் தங்களுக்கான பொருட்களை நேரவிரயமின்றி பெறுவதற்கு ஏதுவாக எளிமையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Ration ShopTn newsNew procedure at ration shops: People are struggling to get essential items
ShareTweetSendShare
Previous Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Next Post

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies