குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!
Jun 6, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. சேலம் மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் பள்ளபட்டி பூங்கா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பள்ளபட்டி ஏரி பூங்கா தான் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பிரதான பொழுதுபோக்கு தளமாகத் திகழ்கிறது. ஏரிக்கரையைச் சுற்றி பத்திற்கும் அதிகமான குடில்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், பாதுகாப்பிற்காகக் கம்பி வேலிகள் என அத்துனை சிறப்பு அம்சங்களுடனுன் காணப்பட்ட இப்பூங்கா அண்மைக்காலமாக எந்தவித வசதியுமில்லாத அவலநிலையில் காட்சியளிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பூங்கா,  முதலமைச்சரால் திறந்து வைத்த ஒரே ஆண்டிற்குள் பொலிவிழந்து காணப்படுகிறது.

ஏரிப் பூங்கா பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார குடில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்தகைய செயல்களை செய்தவர்கள் யார் என்ற விசாரணை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் மாலை நான்கு மணியை கடந்து விட்டால் இப்பூங்கா முழுவதும் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு காலி பாட்டில்களைப் பூங்காவிலேயே போட்டு விடுவதோடு, நடைப்பயிற்சிக்கு வருவோரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் மதுப்பிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. மாலை நேரங்களில் மதுப்பிரியர்களின் தொல்லை ஒருபுறமிருக்க, இரவு நேரங்களில் பாலியல் தொழில் அரங்கேறும் இடமாகவும் இப்பூங்கா மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபட்டி ஏரி பூங்கா, முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பூங்காவைப் பராமரிக்கத் தவறிய சேலம் மாநகராட்சி மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்

பெருகிவரும் நகர்மயமாக்கலுக்கு மத்தியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அவர்களின் ஓய்வு நேரத்தை விருப்பம் போலக் கழிக்கவும் உதவும் பூங்காக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனச் சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pallapatti Parka garbage dump: People are shocked as it has become a tent for alcohol loversகுப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies