அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாபநாசத்திற்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இடைகால் பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வயல் வெளிக்குள் சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.