பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதியைப் பாகிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்குப் பதிலாக, ராணுவ தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி வழங்கும் ஒப்புதலுக்கு இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.