திருப்பூர் கொண்டு வரப்பட்ட ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மைவாடி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளியின் தாளாளரான மூர்த்தி என்பவரின் ஒரே மகள் காமாட்சி தேவி என்பவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான உடுமலைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பள்ளியில் வைக்கப்பட்ட காமாட்சி தேவியின் உடலுக்குப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.